Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

vijay|tvk|quicktamilnews

வைகாசி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ்நாடு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்க தவெக தலைவர் விஜய் மக்கள் பவனில் காத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.

தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் ஆளுநரை சந்திக்க மக்கள் பவனுக்கு வருகைதந்திருக்கும் விஜய்யை இதுவரை ஆளுநர் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆளுநருடனான சந்திப்பின்போது, ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்று விஜய் கோரிக்கை விடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

மேலும், விஜய் வந்த காருக்கு மட்டுமே மக்கள் பவனுக்குள் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதிலும் 15000 தானசாலைகள் இதுவரையில் பதிவு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube