மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மஹாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (13) புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள் ஊடாக வினாடிக்கு (செக்கன்) 3,000 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்காலத்தில் மழை மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும், தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மஹாவலி கஙகயை பயன்படுத்தும மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் எனவும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் தலைமைப் பொறியாளர் திசர பண்டாரா தெரிவித்துள்ளார்.
