தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று நேற்று (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
எனினும் இன்று (21) காலை சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் குறித்த விபத்தின் காரணமாக லொறி பலத்து சேதம் அடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
