அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா விடுதி ஒன்றுக்கு பின்புறமாக உள்ள கடற்கரையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை (23) காலை அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மனித தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தலைப்பகுதி ஒரு ஆண் நபருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தலை துண்டாடப்பட்டு உயிரிழந்த நபரின் விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
