வவுனியா திருநாவற்குளத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் பல தடவை மின்தடங்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக காலை வேளைகளில் தினமும் மின்சாரம் தடைப்படுவதனால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக ஒரு நாளில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் மின் தடங்கல் ஏற்படுவதனால் பல இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் இது தொடர்பாக மின்சார சபையின் பாவனையாளர் சேவைக்கு பல தடவை அறிவிக்கப்பட்ட போதும் இதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.
