ஹட்டன் டிக்கோயா நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடந்த (21) இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கி வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டு இன்று (24) ஹட்டன் நீதவான் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் தெமோதரை பகுதியைச் சேர்ந்த, செல்லையா மனோஜ் (47) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்த போது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபரால் குறித்த வயோதிப பெண்ணிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து தங்க நகைகளும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி மற்றும் கூர்மையான ஆயுதம் ஒன்றினையும் பொலிஸார் ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர்,
