கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளை அறிவிப்பதை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக இவ்வழக்குகளின் தீர்ப்புகள் இன்றைய தினத்திற்கு (26) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, மேல் நீதிமன்றம் இன்று இத்தீர்ப்புகளை அடுத்த மாதத்திற்கு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
