Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதிமிக்க குஷ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமான முறையில் 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ் ரக போதைப்பொருட்களை பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்த சந்தேகநபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ரேகு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (26) செவ்வாய்க்கிழமை காலை பயணிகளுக்கான வெளியேறும் வாயிலினூடாக விமான நிலையத்திலிருந்து செல்ல முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பயணியை ரேகு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அவரின் பயணப்பொதியைத் பரிசோதனையிட்டபோது , பயணப்பொதியினுள் இருந்த 19 பாக்கெட்டுகளில் பொதியிடப்பட்டபெருமளவான போதைப்பொருளை அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

இந்தச் சோதனையின் போது சுமார் 8 கிலோ 365 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 8 கோடியே 36 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்கது என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்- 403 என்ற விமானத்தின் மூலம் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார். இதேவேளை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தலவத்துகொட உணவகத்தில் தீ விபத்து; நால்வர் காயம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாயச்சித்திரக் கண்காட்சி – கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை ! – மயூர நெத்திகுமாரகே!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube