இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறக்குவானை பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் வருடாந்த பெரஹெரா நிகழ்வுக்காக குறித்த யானை அழைத்து வரப்பட்டிருந்தது. நிகழ்வின் போது யானை எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஆவேசமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, யானையின் தாக்குதலுக்கு உள்ளான அதன் பிரதான பாகனும், அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இறக்குவானை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
