மத்திய மலை நாட்டில் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
கினிகத்தேன, அம்பகமுவ ,நோட்டன்,மஸ்கெலியா ,ஹட்டன் ,நல்லதண்ணி ,பொகவந்தலாவ ,நோர்வூட் கொட்டகலை ,லிந்துல ,நானுஓயா நுவரெலியா பகுதியில் கடுமையான பணி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், வாகனங்களில் மின் ஓளியை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறும் ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன மழை பெய்து வருவதால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் அங்கு உள்ள பிரதான கங்கையில் நீராட வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மரக்கறிகளின் விலைகள் வானளவு உச்சத்தை எட்டியுள்ளது.
