நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
