கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள், அமெரிக்கா – ஈரான் இடையேயான சமரச முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசித்துள்ளன.
கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, சுவிஸ் கூட்டாட்சி வெளியுறவுத் துறையின் தலைவர் இக்னாசியோ காசிஸுடன் (Ignazio Cassis) தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே இஸ்லாமாபாத் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமரச முயற்சிகள் குறித்தும், பதற்றத்தைக் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
