Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “வளமான நாடு அழகான வாழ்க்கை” சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம் கிராமத்தில் நெல் உலர்த்தும் தளம் மற்றும் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (02) இடம்பெற்றிருந்தது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இவ்விழாவில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அரச அதிகாரிகள் மற்றும் கந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த நெல் உலர்த்துதல் மற்றும் பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குப்பைகளால் நிரம்பி வழியும் கண்டி நகரம்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டிய தீவிபத்து – வைத்தியசாலையில் அனுமதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்: ஐ.தே.க. அறிக்கை!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube