அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை நோக்கி நீர் கொண்டு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக, கொலன்னாவை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (05) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, மொரகஸ்முல்ல,இராஜகிரிய,நாவல,ஒபேசேகரபுர,கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
