Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

தீ விபத்தில் படுகாயங்களுடன் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இன்று (05) வெள்ளிக்கிழமை மற்றுமொருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளாக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மெத்தைகளில் தீ பரவியதே இந்த விபத்திற்கு காரணம் என அரச ரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தேவிபத்தின் போது வளாகத்தில் இருந்த 70 நோயாளர்களின் 52 பேர் பொதுமக்கள் மற்றும் போலீசாரால் காயங்கள் இன்றி மீட்கப்பட்டன எனினும் 10 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிர் இழந்ததுடன் வைத்தியசாலைகள் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் இராணுவ உதவியுடன் கல்பாத்த பகுதியில் உள்ள மாற்று இல்லத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உப்பாலி பன்னிலகே, இந்த முதியோர் இல்லம் எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்

இதனை அடுத்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொரளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹஸ்புர கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube