இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 05 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின்படி, இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன சபையாக நிறுவப்பட முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்துவதற்கும், பட்டய ஊடக வல்லுநர்களை ஒருங்கிணைந்த நிறுவன அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
