வெளிநாட்டுக்கு பயணிக்க விரும்பும் பௌத்த தேரர்கள், தமது பிரதான தேரர்கள், பிரதேச தலைவர்கள் மற்றும் அந்தந்த பீடங்களின் (Chapter) மகாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இந்த ஒழுங்குமுறையை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் முன்னதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறையே இவ்வாறு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ், பீடங்களின் பதிவாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கையிருப்புடன் நாட்டிற்குள் வருகை தந்து, பிக்குகள் போன்று வேடமிட்டு மதத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
