மீகொடை தானசாலை மீது கெப் ரக வாகனம் மோதி, 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன உரிமையாளர் உட்பட இருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று (06) சனிக்கிழமை ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த மே ஞாயிற்றுக்கிழமை (31) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் தப்பியோடியிருந்த நிலையில் இன்றையதினம் சட்டத்தரணி மூலம் பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
