இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் (Sabina Park) மைதானத்தில் இன்று (9) இலங்கை நேரப்படி அதிகாலை 1:00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவிருந்தது.
எனினும், நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாகப் போட்டியின் நாணய சுழற்சி குறிப்பிட்ட நேரத்துக்கு நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
இரண்டாவது போட்டி மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
