ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதி கடமைகள் தெஹ்ரானில் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதிதிகள் நினைவுக் குறிப்பேட்டில் ஈரான் அரசாங்கத்தின் அழைப்பையேற்று இலங்கையிலிருந்து கலந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் அனுதாபத்தை பதிவு செய்து கையொப்பமிட்டனர்
இதன்போது அவர்கள் ஈரானிய பிரதிநிதிகளோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பசீஹா அஸ்மி மற்றும் தூதரக அதிகாரிகளும் அவர்களை சந்தித்து உரையாடினர்.

