முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அனுப்புவதே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் ஒரு அபாயகரமான அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
