இன்று ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை மேற்றக்கொள்ள இருந்த நிலையில், வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே சங்கத்திற்கும் துணை அமைச்சரின் தனிச் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு முடிவை அறிவிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, புதன்கிழமை (10) பயணிகள் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், பயணிகள் எவ்விதத் தடையுமின்றி பயணிக்க முடியும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சரக்கு ரயில் சேவைகளில் இருந்து மட்டும் விலக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
