ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பிலும், சந்தேகநபர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்படி, தலா 50 இலட்சம் ரூபாய் மதிப்புடைய இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
