யாழ்ப்பாணம் – செம்மணி மனிதபுதைகுழியில் இருந்து நேற்று (17) புதன்கிழமை 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட என்புகூடுகளில், குழந்தை ஒன்றினதும், சிறுவர் ஒருவருடையதுமாக , 05 என்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (17)முன்னெடுக்கப்பட்டன.

இந்த அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் இரும்பு வளையம் போன்ற பொருளொன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
