அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல்சார் போக்குவரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள நேரடி சந்திப்புக்கு முன்னதாக மின்னணு முறையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உடனடியாக பகைமையான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
