யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் இன்றையதினம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக குறித்த கடற்றொழிலாளர் கடந்த 11 ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், காவல்; நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இன்றைய தினம் (20) அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
