Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – சட்ட நிபுணர்கள் விளக்கம்!

ஆனி 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்

போதைப்பொருள் தொடர்பான பொய் வழக்குகளில் அப்பாவி பொதுமக்கள் சிக்கவைக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்கள் பதற்றமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், காவல்துறை அதிகாரிகளுடன் உடல்ரீதியான மோதல்களில் ஈடுபடக் கூடாது என்றும் சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்படும் தருணத்தில் அருகிலுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்து, சம்பந்தப்பட்ட பொருள் தமக்குச் சொந்தமானதல்ல என்பதை உரக்கத் தெரிவிப்பதும், சாட்சிகளை உறுதிப்படுத்துவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதேவேளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர், அடையாள எண், வாகன இலக்கம் மற்றும் சம்பவம் இடம்பெற்ற இடம் போன்ற விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் எந்தவொரு ஆவணத்திலும், குறிப்பாக வெற்றுத் தாள்களிலும் கையொப்பமிட வேண்டாம் என்றும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட உடனேயே குடும்ப உறுப்பினர்கள் அல்லது சட்டத்தரணியைத் தொடர்புகொள்வதற்கான உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது, தாம் நிரபராதி என்றும், சம்பந்தப்பட்ட பொருள் தமக்குச் சொந்தமானதல்ல என்றும் நீதிபதியிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என சட்ட ஆலோசனைகள் கூறுகின்றன.

தாக்குதல் அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தால், தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் (JMO) அதனை அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்றும், மருத்துவ அறிக்கைகள் முக்கிய ஆதாரங்களாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டச் செலவுகளுக்குப் பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூடாது என்றும், நிதி வசதி இல்லாதவர்கள் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஊடாக இலவச சட்ட உதவியைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய காவல் ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புகளில் புகார் அளிக்கலாம் என்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களையும் தாக்கல் செய்ய முடியும் என சட்ட நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவல்கள் பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் பகிரப்பட்டுள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இது பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு தகவலாகும். குறிப்பிட்ட சட்ட ஆலோசனைக்காக தகுதியான சட்டத்தரணியை அணுகுவது அவசியமாகும்.)

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை!

ஆனி 19, 2026
முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலக்கம் மோசடி இலக்கங்களின் பட்டியலில் இணைப்பு!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி அனுர!

வைகாசி 23, 2026
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் நடுக்கடலில் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube