மத்திய கலாசார நிதியம் (CCF) தற்போது அதன் ஆரம்ப இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் அதன் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றால் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடிந்திருக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் கூறினார்.
வெள்ளிக்கிழமை (19) உடுநுவரை, வேலம்போட பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லங்கொல்ல போத்துகுல் மூல் மகா விகாரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விகாரை சைக்கிளோன் தித்வா காரணமாக சேதமடைந்திருந்தது.
நாட்டின் முன்னேற்றம் வெறும் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே மதிப்பிட முடியாது என வலியுறுத்திய பிரதமர், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் கல்வியை பாதுகாப்பது மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.
இந்த புனரமைப்பு திட்டம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
