தெரணியகலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஜூன் 19 ஆம் திகதி தெரணியகலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட சம்பவமொன்றின் போது, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதுடன் அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து “ஐஸ்” எனப்படும் போதைப்பொருளின் 24,900 மில்லிகிராம் அளவு கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு சந்தேகநபர்களும் ஜூன் 20 ஆம் திகதி அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
