தம்புத்தேகம, யாய 05 பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜாங்கனை, யாய 05 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
