எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் , நுகர்வோரும் விவசாயிகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் வகையிலான கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது ‘X’ சமூக வலைத்தள பதிவில் அவர், சோள இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவாக கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் உயர்ந்துள்ளதாகவும், இதனால் புரதச்சத்து உணவுகளைப் பெற ஏற்கனவே சிரமப்படும் குடும்பங்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 150,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதால் நெல் விவசாயிகள் தங்களது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அரச நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த பிரச்சினை இருப்பதை விவசாய அமைச்சே ஒப்புக்கொண்டதாகவும், சந்தையில் தலையீடு செய்யும் -இன் திறன் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரிசி சந்தையில் நிலவும் ஏகபோகத்தை கட்டுப்படுத்தவும், சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உருவாக்கப்பட்டிருந்த 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டமைக்கு அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
“சக்தி கூட்டுறவுச் சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஏழை மக்களை இரு தரப்பிலும் பாதிக்கும் கொள்கைகளை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்திய அவர், நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்படுவதற்கான அவசர நடவடிக்கைகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
