தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைத்துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகை தோட்டாக்களும் மத்திய குற்றவியல் பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (22) நண்பகல் மீட்டியாகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் 09 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த ஐந்து தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டவராவார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே இந்த ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றவியல் பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
