பருத்தித்துறையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து தேடுதல் நடத்த, இந்திய அரசின் அனுமதியைப் பெற்று , தேடுதல் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருது தெரிவிக்கையில்,
பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்று காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் நீண்ட பணியினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தேடுதல் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு, இந்திய கடல் எல்லை பகுதியை அண்மித்த இடங்களிலும் தேடுவதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற்று தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
GPS ஊடாக படகுகளின் இடத்தை கண்டறிய கடுமையான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை தொடர்பில் கண்டறிய முடியவில்லை. அத்துடன் ட்ரோன் ஊடாக கடற்பகுதியில் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டார்.
