இலங்கையின் ஓவியக் கலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிரபல ஓவியர் மொட்டாகெதர வனிகரத்ன அவர்கள் காலமானார்.
மரணமடைந்த போது அவர் 93 வயதை எட்டியிருந்தார்.
பல தசாப்தங்களாக தனது கலைப்படைப்புகள் மூலம் இலங்கை சமூகத்தின் எண்ணங்கள் மற்றும் ரசனையை மேம்படுத்துவதில் அவர் சிறப்பான பங்காற்றியுள்ளார்.
1956 அக்டோபர் 03 முதல் 05 வரை கொழும்பு தேசிய கலைக்கூடத்தில் நடைபெற்ற “என் இலங்கை” எனும் அவரது முதல் தனிநபர் ஓவியக் கண்காட்சி, அவரது கலை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
மொட்டாகெதர வனிகரத்ன அவர்கள் கேன்வாஸ் ஓவியங்களுக்கே மட்டுப்படாமல், இலங்கையின் தோரணக் கலைக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய கலைஞராகவும் மதிக்கப்படுகிறார்.
அதேபோல், லங்காதீப பத்திரிகையில் ஓவியராக பணியாற்றி, தனது கோடுரேகை திறமையை ஊடகங்களின் வழியாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.
