வெள்ளவத்தை ரொக்சி வீதி மற்றும் காலி வீதிக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பு இடத்தில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலி வீதியில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கிடையேயான கடும் போட்டியே இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன், பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலையில், அதிகளவில் ஒலிப்பான்கள் (Horn) பயன்படுத்தப்படுவதால் சிறுவர்கள் மற்றும் மூத்தோர்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமத்திற்கும் மனஅழுத்தத்திற்கும் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமைக்கு உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
