15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் விசேட உயர்நீதிமன்றம் 32 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், மேலும் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அனுராதபுரம் விசேட உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தம்புத்தேகம பகுதியில் பதிவான சம்பவத்துடன் தொடர்புடையதாகும்.
விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி எனத் தீர்மானித்து தண்டனை விதித்துள்ளது.
