கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆரம்பப் பாடசாலை கட்டுமானத் தரநிலைகள், மாற்றுப் பாடசாலை நிர்வாகம், மாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி சவால்கள் தொடர்பாக நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த பிரதமர், தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தினார்.
