Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

ஆனி 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்திய வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4,700 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ்,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பேரிடர் அபாயம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகள் அடையாளம் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, 22 பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம அல்கடுவ ஆகிய தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தில் தலா ஒரு வீடு கட்டுமானத்திற்காக இந்திய அரசு 28 இலட்சம் ரூபாவையும், இலங்கை அரசு 4 இலட்சம் ரூபாவையும் ஒதுக்கியுள்ளன.

இந்த வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க வேண்டுமெனவும் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை,அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) கே. எஸ். விஜயகீர்த்தி, பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) என். டி. என். புஷ்பகுமார, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) டபிள்யூ. ஏ. கே. எஸ். தமயந்தி, பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தோட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி மருத்துவர் என நடித்து ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய ஆணொருவரின் சடலம்!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube