இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்னும் சுமார் 5 மில்லியன் பேர் TIN இலக்கம் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனினும், உள்நாட்டு வருவாய் திணைக்களம் அஞ்சல் மூலம் TIN இலக்கத்தை தொடர்புடைய நபர்களுக்கு அனுப்பாத காரணத்தால், பலரும் தங்களுக்கு TIN இலக்கம் உள்ளதா இல்லையா என்பதை அறியாமல் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் இணையதளத்துக்கு சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் ஒருவர் தமக்கு TIN இலக்கம் உள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
