கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கான “அம்பர்” அவசர வானிலை எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (28) காலை 11 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிராந்தியங்களில், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இதன் காரணமாக, குறித்த கடபிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்றொழிலாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்களும் இவ்விடயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இதுதொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
