முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக ஆலய பிரதம குருக்கள் கீர்த்தி ஸ்ரீ வாசன் குருக்கள் அவர்களின் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி விசேட திருவிழாக்களான 13 ஆம் திருவிழா வேட்டை திருவிழாவும் 14 திருவிழா சப்பரத் திருவிழாவும் 15 ஆம் திருவிழா தேர்த்திருவிழாவும், இடம்பெற்றது.
வெகு சிறப்பாக மூன்று சித்திரை தேர்களில் சுவாமி வெளி வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்வெளிவீதியுலாவும் இடம்பெற்றது.
16 திருவிழாவாக தீர்த்தோற்சவமும் , கொடி இறக்க திருவிழாவும் , பூங்காவனத்திருவிழாவும் இடம்பெற்றது. அத்துடன் அடியார்களினால் தூக்குக்காவடி, பால் சொம்பு, பறவைக்காவடி, அங்கபிரதட்சணம், அடி எடுத்தல், போன்ற நேர்த்திக்கடன்கள் அடியார்களினால் செய்யப்பட்டுள்ளது.நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவைக்கான பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைதந்தனர்.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
