வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர்கள் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் 2,600க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளுடன் மீட்புக் குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிப்பு குறித்து அந்நாட்டு தேசிய சட்டமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,
1,450 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,150 பேர் காயமடைந்துள்ளனர். 12,721 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு மிக முக்கியமான 72 மணித்தியாலங்கள் சனிக்கிழமை மாலையுடன் கடந்துவிட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வருவதாக சுவிட்சர்லாந்து மீட்புக் குழுவின் தலைவர் செபாஸ்டியன் யூக்ஸ்டர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், ஞாயிற்றுக்கிழமை வரை இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தந்தையும் மகனும் உயிருடன் மீட்கப்பட்டதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
