கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற 6 வயது சிறுமியே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. இதில் குறித்த சிறுமி தொடர்ந்து 2 மணி 30 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்த சாதனை ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கணேஸ்வரன் அவர்களால் சிறுமிக்கு “உலக நாட்டிய இளவரசி” என்ற பட்டம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தகத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
