மாத்தளை – குருநாகல் வீதியில் குடாஒய பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறி வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி ரிதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கும்புக்கவவ பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
மதுராகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
