தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கினிகத்ஹேனை – நாவலப்பிட்டிய பிரதான வீதியின் ஒரு பகுதியில் இன்று (04) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் மற்றும் கற்கள் வீதியில் குவிந்துள்ள நிலையில், வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
