Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தேசிய பேரிடர் முகாமைத்துவத்தில் புதிய சீர்திருத்தங்கள்

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடி, எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தது.

விவசாயம், குடிநீர் விநியோகம், மின் உற்பத்தி, நீர் வள முகாமைத்துவம் மற்றும் வனவிலங்குகளுக்கான நீர் வசதிகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும், நீர்மின் உற்பத்தியைப் பாதுகாக்க நீர்த்தேக்கங்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் சூரிய மின்சார சேமிப்புக்கான மின்கலங்களை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதன்போது, பல்வேறு நிறுவனங்களின் கீழ் செயல்படும் பேரிடர் முகாமைத்துவ சேவைகளை ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு, பேரிடர்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் (NDRSC) ஆகியவற்றை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அதேவேளை, காணி ஆவணங்கள் இல்லாத குடும்பங்களுக்கு வசிப்பிடத்தை உறுதிப்படுத்தி இழப்பீடு வழங்கும் திட்டம், காணிச் சட்டங்களை ஒருங்கிணைத்தல், மண்சரிவு அபாயப் பகுதிகளில் வாழும் குடும்பங்களை நான்கு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்றும் திட்டம் மற்றும் மீட்புப் பணிகளுக்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் போன்ற தீர்மானங்களும் கூட்டத்தில் கவனம் பெற்றன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த காலநிலை மாற்றம் தொடர்பான பரிந்துரைகளையும் சட்டத் திருத்தங்களில் பரிசீலிக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதி சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல் விற்பனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
இலங்கை

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா கைது!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube