கொழும்பு பேரை வாவி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹூனுபிட்டிய கங்காராமய விகாரையைச் சுற்றியுள்ள பகுதியை, சர்வதேச சுற்றுலா மற்றும் கலாசார மையமாக மாற்றும் Temple City திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாரநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஹூனுபிட்டிய கங்காராமய விகாரையின் வழிகாட்டலின் கீழ், நகர் நிருமாணப் அதிகாரசபையினால் (UDA) இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்கீழ், பேரை வாவியைச் சுற்றி நடைபாதை அமைத்தல், இயற்கையழகுடன் கூடிய நிலப்பரப்பை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வசதிகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
