கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை (4) 12 மணி நேர நீர்விநியோகம் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேஹிவளை, மவுண்ட் லவினியா, ரத்மலானை, மொரட்டுவ, ராவத்தாவத்தை மற்றும் சொய்சபுர பகுதிகள் பாதிக்கப்படும்.
முன்னதாக, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள பகுதிகளிலும், அதே நேரத்தில் நீர்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கோஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடியவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுத்துவெல, மகரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளும் இதில் அடங்கும்.
அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்விநியோகம் நிறுத்தப்படுவதால் அவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
