ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்துகொண்டு இசையைக் கேட்டபடி வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸாரின் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இவ்வாறு ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்தபடி வீதியில் செல்வதால் பாதசாரிகள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை இவ்வாறானவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
