செயல்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவமழை நிலை காரணமாக மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடலோர மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
